கோவை மாநகராட்சியின் வரி உயர்வை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்- அனைத்துக்கட்சி முடிவு

உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை மற்றும் குப்பை வரி உள்ளிட்ட வரி உயர்வினை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை, குப்பைவரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறியதாவது:-

மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும். 

மேலும், வரும் நவம்பர் 3-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாaட்டம் நடைபெறும்.

மாநகராட்சி நிர்வாகம் வரி குறைப்புக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சி மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...