ஜி.எஸ்.டியில் சிறு வர்த்தகர்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி

நாடு முழுவதும் கடந்த ஜுலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் நடந்த சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும், பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகள், தின்பண்டங்கள் உள்பட 27 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அண்மையில் ஜி.எஸ்.டி. மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் :

* 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் வருவாய் எடுக்கும் வணிகர்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தால் போதும்.

* ஏசி உணவகங்களின் ஜிஎஸ்டி வரி 18% இருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது

* ரூ.50,000கும் மேல் நகைகள் வாங்குபவர்கள் ஆதார், பேன் விவரங்களை வழங்காத தேவையில்லை.

* ஸ்டேஷனரி பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது

* டீசல் எஞ்சின் பொருட்கள் மீதான வரி 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு

* ப்ராண்டுகள் அல்லாத ஆயுர்வேத மருந்துகள் மீதான வரி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைந்தது

* ஏப்ரல் 1 முதல் ஈ-வாலெட் எனப்படும் புதிய இணையதள கணக்கு துவக்கப்படும்

* ஏற்றுமதியாளர்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யில் (IGST) இருந்து 6 மாதங்கள் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது/ 

இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோருக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் வனிதா மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை காட்டுகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மூலம் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் பயன்பெறுகின்றன. 

இதேபோன்று குறிப்பிட்ட ஒருசில துறைகளிலும் விதிக்கப்பட்ட வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என நம்புகிறோம். சிறு, குறு தொழில்களின் ஒன்றான கிரைண்டர் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பையும் குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...