நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கி தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாய சங்கம் மனு

நீரா பயிற்சி வகுப்புகளை தொடங்கி தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



தமிழ்நாட்டில் தென்னை சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பருவமழை குறைவு, நீர்பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் நெல் உட்பட தானியங்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.

மேற்கண்ட நிலங்களில் தென்னையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னையில் இளநீர், நீரா, வெல்லம், தேங்காய், எண்ணைய், சிரட்டை, கயிறு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைக்கின்றன.

இதில், நீரா பானத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. நீராவைப் பயன்படுத்தி வெல்லம், பாகு, சீனி உள்பட பல பொருட்கள் தயாரிக்கலாம். நீரா பானத்தை பயன்படுத்தி நீரா சக்கரை, நீரா வெல்லம், நீரா லட்டு, நீரா தேன், நீரா கேக் போன்றவை கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு நீரா குறித்து தனிப்பயிற்சி நடத்தப்பட்டு கேரளாவில் பெரும் வெற்றியடைந்துள்ளது. தென்னை விவசாயம் பாதுகாப்புள்ளதாக தெரிகிறது.

கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், கடந்த பல ஆண்டுகளாக நீரா இறக்கும் பயிற்சி, பதப்படுத்தும் தொழில்நுட்பக் கல்வி அதை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றும் என்பது போன்ற களப்பயிற்சிப் பட்டறைகளை ஊக்கத் தொகையுடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

எனவே தமிழகத்தில் நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் தமிழகத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சர்வதேச தேங்காய் விற்பனை மையம் ஒன்றை கோவையில் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணை விநியோகம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...