ஈஷா விவகாரம்: பெற்றோர்கள் சந்திப்பதற்கு தடைகோரி மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.20-க்கு ஒத்தி வைப்பு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முனைவர் காமராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் தொடங்கி, 5000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகிறார்.

இவரது மகள்களான கீதா, லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்து இருந்தார்.

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்த கீதா மற்றும் லதா ஆகியோரை மூலை சலவை செய்த ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், நான்தான் கடவுள் எனக்கூறியதோடு சகோதரிகளான இருவருக்கும் திருமணம் நடக்காமல் இருக்க மொட்டை அடித்துள்ளார்.

மேலும், காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாக பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து, தங்களது குழந்தைகளை பார்க்க ஈஷா மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும், இருவரையும் மீட்டுத்தருமாறும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கியிருப்பதாக கோவை முதன்மை நீதிபதியின் நேரடி விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை சந்திக்க தடை விதிக்கக்கோரி கீதா மற்றும் லதா ஆகியோர் தொடுத்த வழக்கு விசாரணை திங்களன்று நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...