நீலகிரியில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெறும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டமானது மலைப்பிரதேச மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தின் பூகோள ரீதியான அமைப்பின்படியும் புவியியல் தொழில்நுட்ப துறையின் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் ஆய்வறிக்கையின்படியும் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளின் பல்வேறு இடங்களில் கட்டிடம் கட்டும் பணிகளை முறைப்படுத்த வேண்டியும், அனுமதியற்ற கட்டிடங்களை தடுக்கும் வகையிலும் மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டி பெறப்படும் விண்ணப்பங்களின் காலத்தாமதத்தை தவிர்க்கவும், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் இந்த இணைய தளத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிவேற்றம் செய்து பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இணை தள முகவரி: www.nilgirisbuildingpermissions.org

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...