நீலகிரியில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெறும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டமானது மலைப்பிரதேச மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தின் பூகோள ரீதியான அமைப்பின்படியும் புவியியல் தொழில்நுட்ப துறையின் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் ஆய்வறிக்கையின்படியும் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளின் பல்வேறு இடங்களில் கட்டிடம் கட்டும் பணிகளை முறைப்படுத்த வேண்டியும், அனுமதியற்ற கட்டிடங்களை தடுக்கும் வகையிலும் மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டி பெறப்படும் விண்ணப்பங்களின் காலத்தாமதத்தை தவிர்க்கவும், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அனைவரும் இந்த இணைய தளத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிவேற்றம் செய்து பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இணை தள முகவரி: www.nilgirisbuildingpermissions.org

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...