கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேசத்திற்கு மாற்றும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை உத்திர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வமைப்பின் பொருளாளர் பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிறைநுதல் செல்வி கூறுகையில், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்காமல் தமிழக அரசு மத்திய அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. 

அரசு அச்சகத்தை இடமாற்றும் முடிவை கைவிட வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு பிறைநுதல் செல்வி தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...