கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேசத்திற்கு மாற்றும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவை அரசு அச்சகத்தை உத்திரபிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை உத்திர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வமைப்பின் பொருளாளர் பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிறைநுதல் செல்வி கூறுகையில், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தடுக்காமல் தமிழக அரசு மத்திய அரசிற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. 

அரசு அச்சகத்தை இடமாற்றும் முடிவை கைவிட வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு பிறைநுதல் செல்வி தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...