கோவையில் நடைபெற்ற சேலம் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

சேலத்தில் அமைக்கப்பட உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-

"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.

தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...