கோவையில் உள்ள அணைகள் மற்றும் நீர்தேக்கங்களை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



ஜுலை மற்றும் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து, சரிசெய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மந்தமாக செயல்படுகின்றனர். இதனால், எதிர்வரும் மழைக்காலங்களில் அணைகளுக்கு வரும் நீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. எனவே, நகரில் உள்ள நீர்நிலைகளை சீர்செய்து, நீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு அளித்த பேட்டியில் சமூக ஆர்வலர் மணிகண்டன் பேசியதாவது, குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், பொதுப்பணித்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. 



நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், உடைப்பு ஏற்பட்டு நீர்தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை முறையாக பராமரித்தால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயத்திற்கு இந்த நீரை பயன்படுத்த முடியும். எனவே, உரிய நிதி ஒதுக்கி நீர்தேக்கங்கள் மற்றும் அணைகளை முறையாக பராமரித்து, எதிர்வரும் மழைக்காலங்களின் போது வரும் நீரை தேக்கி வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...