டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நீலகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை ஏடிசி பேருந்து நிலையம் எதிரில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுச்சித் தமிழரின் ஆணைப்படி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜன், வேலுச்சாமி, உதகை சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகர செயலாளர் இஸ்மாயில், கூடலூர் நகர செயலாளர் துகில் மேகம், தொழிலாளர் விடுதலை முன்னணி நகர பொருப்பாளர்கள் கணேஷ் முத்தையா, மைக்கேல், குருஸ் ராபீன், சிறுத்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...