சசிகுமார் கொலை வழக்கில் வாலிபர் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்



இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை, முதலில் துடியலூர் போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால் அந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பல்வேறுகட்ட விசாரணைக்குப் பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதில் சதாம் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை, சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர்.



சதாம் கைதுக்குப் பிறகு, சுபேர் பாலக்காட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார். இதனிடையே, தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்த சுபரை போலீஸார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 1.20 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...