இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

இரட்டை இலை சின்னத்தினை மீட்டெடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தில்லியில் விசாரணைக் கைதியாக உள்ளார். 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரப்பெற்றதையடுத்து தொடர்ந்து விசாரணைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். 

இதனிடையே, கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்த ராஜவேல் என்பவரிடம் ஒப்பந்தங்கள் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.2.40 லட்சத்தை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்து விட்டதாகக் வழக்கு பதியப்பட்டு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக, தில்லியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் வழக்கு விசாரணையை வருகின்ற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...