சங்கரா கல்லூரியில் பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டி

தேசிய மகளிர் ஆணைக்குழு மற்றும் சங்கரா கல்லூரி பெண்கள் மேம்பாட்டுச் சங்கமும் இணைந்து தேசிய அளவிலான பெண்களுக்கான சட்ட உரிமைகளைப் பற்றிய போட்டிகள் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இப்போட்டிக்கான வினாத்தாளை வழக்கறிஞர் கோகிலா சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னர் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டிக்கு சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற் இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் பெண்கள் மேம்பாட்டுநலச்சங்கத் தலைவி திருச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், பெண்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் போட்டிகளுக்கான வினாத்தலைப்புகளும் வழங்கப்பட்டன.



வரதட்சணக்கொடுமை, பாலியல்வன்முறை, ஊதியச்சட்டம், பெண்கள்தற்காப்பு முறைகள், மகப்பேறுகால உதவிகள் உள்ளிட்ட பல தலைப்புக்களுக்கான விளக்கங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட பின்னரே போட்டி தொடங்கப்பட்டது.

இப்போட்டியில், சங்கரா கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு நலச்சங்க உறுப்பினர்களான ரம்யா, தீபா, மகாலட்சுமி, சுவர்ணா ரேணுகாதேவி, மணிமேகலை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...