சங்கரா கல்லூரியில் பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டி

தேசிய மகளிர் ஆணைக்குழு மற்றும் சங்கரா கல்லூரி பெண்கள் மேம்பாட்டுச் சங்கமும் இணைந்து தேசிய அளவிலான பெண்களுக்கான சட்ட உரிமைகளைப் பற்றிய போட்டிகள் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இப்போட்டிக்கான வினாத்தாளை வழக்கறிஞர் கோகிலா சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னர் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டிக்கு சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற் இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் பெண்கள் மேம்பாட்டுநலச்சங்கத் தலைவி திருச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், பெண்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் போட்டிகளுக்கான வினாத்தலைப்புகளும் வழங்கப்பட்டன.



வரதட்சணக்கொடுமை, பாலியல்வன்முறை, ஊதியச்சட்டம், பெண்கள்தற்காப்பு முறைகள், மகப்பேறுகால உதவிகள் உள்ளிட்ட பல தலைப்புக்களுக்கான விளக்கங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட பின்னரே போட்டி தொடங்கப்பட்டது.

இப்போட்டியில், சங்கரா கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு நலச்சங்க உறுப்பினர்களான ரம்யா, தீபா, மகாலட்சுமி, சுவர்ணா ரேணுகாதேவி, மணிமேகலை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...