கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயம்- வேளாண்மைத்துறை இயக்குநர் தகவல்

கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சினாமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை உணவு உற்பத்திக்கு போதுமான அளவு பெய்யும் என உத்தேசிக்கப்பட்டுள்ளதால் எவ்வித குறைபாடுமின்றி இவ்வாண்டிற்கான இலக்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோவை வேளாண்மை பல்கலை கழக கூட்டரங்கில் இன்று (அக்டோபர் 12) மண்டல அளவில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு விவசாயம் செழிக்கவும், மற்றும் விவசாயிகளை காக்கின்ற வகையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உறுதுணையாக இருந்து வருகின்றது. அவ்வாறு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து உரிய பயனாளிகளை கண்டறிந்து அவர்கள் எளிமையாக பெறும் வகையில் அலுவலர்கள் பணிற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் 2017-18 ம் ஆண்டிற்கான உணவு உற்பத்தி இலக்கு 125 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில் கோவை மாவட்டத்திற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நெற்பயிர் 2400 ஹெக்டரிலும், சோளம் 27500 ஹெக்டரிலும், மக்காச்சோளம் 4600 ஹெக்டரிலும், கம்பு 100 ஹெக்டரிலும், பயறு வகைகள் 11050 ஹெக்டரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...