நவ.3 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருகிற நவம்பர் 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேலு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறமால் இருப்பின் இதுகுறித்து தங்கள் குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் மனுக்களை இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 20.11.2017-க்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான ஓய்வூதிய குறைதீர்ப்பு நாள் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற நவம்பர் 3 அன்று வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குநர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முகக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறை குறித்து மனு அனுப்ப வேண்டிய மாதிரிப் படிவம்

1. பெயர் மற்றும் முகவரி.

2. பி.பி.ஓ. எண்.

3. ஓய்வு பெற்ற நாள்.

4. கடைசியாக விகித்த பதவி மற்றும் துறை.

5. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.

6. முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் (சுநகநசநnஉந)

7. இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடாந்திருந்தால் அதன் விவரம்.

8. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விபரம்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...