நவ.3 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் வருகிற நவம்பர் 3ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டு பயணடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பல்வேலு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுநாள் வரையிலும் கிடைக்கப்பெறமால் இருப்பின் இதுகுறித்து தங்கள் குறைகள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் மனுக்களை இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு 20.11.2017-க்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான ஓய்வூதிய குறைதீர்ப்பு நாள் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற நவம்பர் 3 அன்று வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குநர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முகக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறை குறித்து மனு அனுப்ப வேண்டிய மாதிரிப் படிவம்

1. பெயர் மற்றும் முகவரி.

2. பி.பி.ஓ. எண்.

3. ஓய்வு பெற்ற நாள்.

4. கடைசியாக விகித்த பதவி மற்றும் துறை.

5. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.

6. முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் (சுநகநசநnஉந)

7. இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடாந்திருந்தால் அதன் விவரம்.

8. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விபரம்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...