கோவை குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரவும், மணல் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஏரிகள், பொதுப்பணித்துறையினரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த ஏரியை மேம்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, ஏரிகளை 6 அடி வரை தூர்வாரினால், மேலும் அதிகமான நீரை சேமிக்கலாம் எனவும், விலை மதிப்புடைய மணலை சில அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நீர்தேக்கத்தின் கட்டுமானங்களை சீர்செய்யாமல், வெறும் தூர்வாரும் பணியால் நீரை சேர்த்து வைக்க முடியாது என்றும், எனவே, அணையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 



நீர்தேக்கத்தை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் தேவைப்படுவதாகவும், பொதுப்பணித்துறையினரால் இந்தத் தொகையை ஒதுக்க முடியாது. அதேவேளையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்களும் இல்லாததால், இது தொடர்பாக, மூத்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...