கோவை குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரவும், மணல் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஏரிகள், பொதுப்பணித்துறையினரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த ஏரியை மேம்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, ஏரிகளை 6 அடி வரை தூர்வாரினால், மேலும் அதிகமான நீரை சேமிக்கலாம் எனவும், விலை மதிப்புடைய மணலை சில அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நீர்தேக்கத்தின் கட்டுமானங்களை சீர்செய்யாமல், வெறும் தூர்வாரும் பணியால் நீரை சேர்த்து வைக்க முடியாது என்றும், எனவே, அணையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 



நீர்தேக்கத்தை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் தேவைப்படுவதாகவும், பொதுப்பணித்துறையினரால் இந்தத் தொகையை ஒதுக்க முடியாது. அதேவேளையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்களும் இல்லாததால், இது தொடர்பாக, மூத்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...