உடுமலையில் அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேரை பலி கொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள அரசுக்கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, தரமற்ற இந்தக் கட்டிடத்தை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், பள்ளிக் கட்டிடத்தை ஒப்பந்தக்காரர் அவசர அவசரமாக கட்டியதால், மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால், வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால், சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு இன்று (அக்.,13) விடுமுறைப்பட்டதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை நடக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...