வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நில வேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு

கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் நில வேம்பு கசாயத்தை வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வழங்கினார். 



தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம், வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமலிருக்க நிலவேம்பு கசாயம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழு மற்றும் அரசு ஆரம்ப சுகாதா நிலையம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?.. டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது,  டெங்கு காய்ச்சலை பரவாமல் எப்படி தடுப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். 



வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைய வட்டார மருத்துவர் பிரவீன், மருத்துவர் வித்யா மற்றும் அரசு அதிகாரிகளும், வால்பாறை வட்ட சட்டப்பணிக்குழுவினரும் உடனிருந்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...