தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட டெங்கு காய்ச்சல் பாதித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை : பொதுமக்கள் பாராட்டு



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பின் தனியார் மருத்துவமனையை அணுகி உயிருக்கு போராடி வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், இதனால் உயிரிழப்பு தவிர்க்க முடியாமல் போவதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 

இந்த நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டு பல்வேறு தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராடி உயிர்பிழைக்க செய்துள்ளனர். 

இதுகுறித்து, உயிர் பிழைத்த  பெண்ணின் கணவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:- சோமனூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் எனது செந்த ஊர். அதே பகுதியில் சொந்தமாக நெசவுத்தொழில் செய்துவருகிறேன். எனது மனைவி காமாட்சி (23). எங்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த சூழலில் எனது மனைவிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு எனது மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறினர், இதனால் அதிர்ச்சியடைந்த நான் தொடர்ந்து எனது மனைவியை அழைத்துக்கொண்டு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனது மனைவியின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த சிவப்பணுக்கள் மிகவும் குறைந்துவிட்டதாகவும் கூறினர். 

தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்கு ரூ.60 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்திவிட்டு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு எனது மனைவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தனியார் இரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்றபின் அதனை எனது மனைவிக்கு செலுத்தினார்கள். தொடர்ந்து, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற கோரி அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

அதன்பின்னரே, கடந்த 9-ம் தேதி எனது மனைவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். எனது மனைவியை காப்பாற்ற பல தனியார் மருத்துவமனைகளை நாடிச்சென்ற எனக்கு கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் ஆறுதல் தந்து, நிச்சயமாக காமாட்சியை உயிருடன் மீட்டு தருவதாக உத்திரவாதம் அளித்தார். தொடர்ந்து, மருத்துவர்களுக்கு எனது மனைவியின் உடல்நிலை குறித்து தெரிவித்து, தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். 

மருத்துவர்களின் முயற்சியால் எனது மனைவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று (அக்.,14) அவர் பூரணமாக குணமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நம்பிக்கையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிவர்த்தி செய்துள்ளனர். 

இவ்வாறு நமக்கு பேட்டியளித்த கிருஷ்ணகுமார் உடனடியாக இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல்-ஐ சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் பெண்ணை உயிர்பிழைக்க வைத்த அரசு மருத்துவர்களை வெகுவாக பாராட்டினர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...