நீலகிரியில் டெங்கு குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்



கோவை, திருப்பூர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதால் நீலகிரியில் டெங்கு பரவாமல் பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அரசு முதன்மைச் செயலர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் சந்திராகாந்த் பி. காம்ளே தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், டெங்கு குறித்த விழிப்புணர்வு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் இல்லாவிட்டாலும், டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநில எல்லை பகுதிகள் அருகில் இருப்பதால், அதிக விழிப்புணர்வுடன் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற சந்திராகாந்த் பி. காம்ளே அறிவுறுத்தினார்.

மேலும், கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர். கள ஆய்வின்போது, முதன்மைச் செயலாளர் காசிம் வயல் பகுதியில் சாக்கடை குப்பை கொட்டும் பகுதி மற்றும் காய்ச்சல் பாதித்த பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறும், கொசுப்புழு உருவாகா வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்  அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, காய்ச்சல் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார். விளம்பரங்களின் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், இணை இயக்குநர் சுகாதாரம் ரகுபாபு, துணை இயக்குநர் பொற்கொடி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ராஜகோபால், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மேகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...