வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குதிரைகள்


கோவை மாவட்டத்தில் உள்ள பரபரப்பான சாலைகளில் ஒன்றான மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் அருகே கடந்த இரு நாட்களாக 3 குதிரைகள் கேட்பாரின்றி சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த குதிரைகள் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.



குறிப்பாக, சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் ஹாரன் ஒலி எழுப்பும் போது குதிரைகள் மிரண்டு ஓடத் துவங்குகின்றன . இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, காவல்துறையினர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் ஐடி ஊழியர் ராஜ்குமார்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், 'தடாகம் பகுதி விவசாயிகளின் குதிரைகளே இவை. சுமை தூக்குவதற்கு பயன்படுத்திவிட்டு பின் சாலையின் ஓரம் உள்ள செடிகளை மேய்வதற்காக விட்டு விடுகின்றனர். அவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் இடையூறு ஏற்படுகிறது' என்றனர்.



கால்நடை ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், 'இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்கள் தொடர்புடைய அமைப்புகளிடம் புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரின் பேரில் இதுபோன்ற குதிரைகள் கைப்பற்றப்படும்' என்றார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது வரை பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகாரும் வரப்பெறவில்லை. புகார் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குதிரையின் உரிமையாளருக்கு அபராதம் உள்ளிட்டு தண்டனை வழங்கப்படும்' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...