சிரியன் ஆலயம் அருகே பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்- பொது மக்கள் அவதி



கோவை மாவட்டம், ஆர்.எஸ். புரத்திற்கு அருகே அமைந்துள்ள சிரியன் சர்ச் பார்க் சாலையில் சாக்கடை குழாயில் சேதம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் வெளியேறிவருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வார்டு எண்: 25, தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிரியன் சர்ச் பகுதியில் இரண்டு சாக்கடைக் குழாய்கள் அமைக்க பட்டுள்ளன . ஒரு குழாயில், அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் எந்த சேதமுமில்லை. மற்றொரு குழாயில் ஆர்.எஸ். புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.



இந்த குழாயிலேயே அதிகப்படியான அளவு நீர் வெளியேறுவதால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிவருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துன்னர்.

மேலும், "மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் தொடர்ந்து இந்த குழாயை சரிசெய்ய முயற்சி செய்துவந்தாலும் கடந்த ஏழு நாட்களாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து பெருமளவு கழிவுநீர் இந்த குழாய் வழியாக வெளியேற்றுவதே ஆகும்.



இதில், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே மேற்குறிப்பிட்ட சாக்கடைக் குழாயில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே, அந்த நேரத்தில் மட்டுமே மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் சாக்கடை குழாய்களுக்குள் இறங்கி அடைப்பை எடுக்க முயன்று வருகின்றனர். பிற நேரங்களில் பெருமளவு கழிவுநீர் வடிவதால் துப்புரவுத் தொழிலாளர்களால் சாக்கடை குழாய்களில் இறங்க முடிவதில்லை.

"பெருகிவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் வடிகால்கள் வேறு வழியில் மாற்றி அமைக்கப்பட்டால் தான் இந்த பிரச்சனை தீரும்" என்றார் அப்பகுதியில் வசிக்கும் சந்திரன்.

"குறிப்பாக, ஆற்றுநீரைப் போல கழிவுநீரானது சாலையில் அதிகளவில் ஓடிவருவதால் அந்த சாலையினை கடப்பதே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தாய் மாறிவருகிறது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவுள்ளது ஏற்பட்டுள்ளது" என்று எச்சரித்தார் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்.

பருவ மழை பெய்யத் தொடங்க யிருக்கும் இந்த சூழலில் மேலும் தாமதிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த கழிவுநீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...