பொலிவிழக்கும் புதிய பேருந்து நிலையம்..! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் ?



மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலணிக்கு மிக அருகில் அமைந்துள்ளது புதிய பேருந்து நிலையம். துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம் வழியாக உதகை செல்லும்  500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. 



சுமார் 3.09 ஏக்கர் பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில், கடந்த 2010-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த புதுபேருந்து நிலையத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், லிஃப்ட், மின் கடிகாரம், உடல் ஊனமுற்றோருக்கான நவீன கழிப்பறைகள், வண்ண மீன் கண்காட்சியகம், சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி போன்ற சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டது. இதற்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த வசதிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன   . இதுகுறித்து விசாரித்ததில் இந்த சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு சுமார் ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது.

"மாற்றுத் திறனாளிகளால், பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாது. அதனால் தான் எங்களுக்காக சிறப்பு இலவசக் கழிவறைகள் அரசால் அமைக்கப்படுகிறது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை மூடித்தான் இருக்கிறது. இதனால் பயணங்களில்  மிகவும் சிரமப்படுகிறோம். கட்டணம் செலுத்தி சுகாதாரமற்ற முறையில், சாதாரண கழிவறைகளை தான் பயன்படுத்தி வருகிறோம்" என்றார் பேருந்திற்காக காத்திருந்த மாற்றுத் திறனாளி சுரேஷ்.



பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் ஒரு ரூபாய் தான். ஆனால் புதிய பேருந்து நிலையத்தில் ஐந்து ரூபாய்க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச ஓய்வறைகளைப் பயன்படுத்த முப்பது ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகாரளித்தார் ஒரு பயணி.



பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியார் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என்பது அரசு விதிமுறைகளில் ஒன்று. ஆனால் தினமும் இரவில் இரண்டுக்கும் மேல் தனியார் சொகுசு பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுன்றன . மேலும் வாகனங்கள் நிறுத்தும் மேல் தளத்தில் வங்கிகளால் கையகப்படுத்தப்படும் வாகனங்கள் முறையான அனுமதியின்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குத்தகைக்காரர்களின் உதவியோடு நடப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பேருந்து நிலைய வளாகத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் சிற்றுண்டி மற்றும் உணவகங்கள், பயணிகளுக்கான பொது இடங்களை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.



மக்களின் பொது பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் தற்போது காணப்படும் முறைகேடுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளால் சரி செய்யப்பட வேண்டும். மக்கள் பணத்தில் அமைக்கப்பட்டு தூசிபிடித்து பழுதாகி கிடக்கும் இயந்திரங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு புதுப்பொலிவுடன்  வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



தரமான வசதிகள்  கொண்ட பேருந்து நிலையம் என்பதற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் மட்டும் போதாது, பயணிகளின் மனநிறைவும் அவசியம் என்பதை மாநகராட்சி நிர்வாகம் உணர்வது எப்போது?

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...