முறையாக ஊதியம் வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கோவை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்மாவதி மருத்துவ மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாதம் தோறும் 8,200 ரூபாய் சம்பளம் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 8,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1,000 ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதியாக பிடிக்கப்படுவது வழக்கம். விடுப்பு இல்லாமல் அனைத்து நாட்களும் எட்டு மணிநேரத்திற்கு ஒரு குழுவாக, மூன்று பிரிவுகளில் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுப்பு எடுத்தால் ஐந்தாயிரம், நான்காயிரம் என முறையான கணக்கு இல்லாமல் ஊதியம் பிடித்து வழங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கான வைப்பு நிதியின் கணக்கு எண்ணைக் கேட்டால் நிறுவனத்தினர் தவறான எண்ணை வழங்குகின்றனர். அந்த எண்ணில் வைப்புத்தொகை பூஜ்யம் என காட்டுகிறது. 

பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், இன்று தங்களுக்கு பண்டிகைக்கால போனஸ் மற்றும் வார விடுமுறை, சம்பளத்தொகை அனைத்தையும் அச்சடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வேலையை புறக்கணித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களுடன் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மகேஷ்வரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு மற்றும் வைப்பு நிதி பிடித்தம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் விரைவில் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி மருத்துவ மேலாண்மை நிறுவனம் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்-வின் உறவினர் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...