வெள்ளலூர் அருகே பட்டாசுக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் கொள்ளை

கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தீபாவளிப் பண்டிகையையொட்டி, அரசின் உரிமம் பெற்று தற்காலிகப் பட்டாசுக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.  இன்று (16.10.2017) மீண்டும் கடையை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அசோக்குமார் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள்கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

தீபாவளி பண்டிகையையொட்டி, பலர் இது போன்ற தற்காலிகப் பட்டாசுக்கடை அமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பிற பட்டாசுக்கடைக்காரர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...