சிறுபான்மையினர் வழிபாட்டுத் தளம் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலம்பூர் பகுதியில் சிறுபான்மையினருக்கான வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

சூலூர் வட்டம், நீலம்பூர் பகுதியில் கிருத்துவ மதத்தினருக்கான ஜெப ஆலயங்கள் செயல்பட்டு வருகின்றன . இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளில் நாங்கள் மிரட்டி தொகை வசூலிப்பதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையான நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நீலம்பூர் பகுதியில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...