மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 3-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்திகேயன் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 3-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், காந்தி நகர் மற்றும் என்.பி.சி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மகாலட்சுமி லே அவுட், சுப்ரமணியம்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ள மாணவர் சாம்ராட் என்பவரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், டெக்ஸ்மோ கம்பெனி வளாகங்களில் டெங்கு கொசு உருவாவதற்கான காரணிகள் ஏதும் உள்ளனவா என்று ஆய்வு செய்து சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உத்தரவிட்டார்.



இதனையடுத்து, சத்யா நகரில் சுமார் 25 சென்ட் அளவிலான மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தை அவர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...