வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு - வனத்துறையினர் அறிவிப்பு

வனவிலங்குகளின் நலன் கருதி வன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, இன்னும் ஒருநாளே உள்ளது. இதனால், அனைவரும் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், வன எல்லைகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  சத்தம் மிகவும் குறைவான வெடிகளை பயன்படுத்தலாம் என்றும்,  வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தடாகம், கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி  மற்றும் காரமடை போன்ற பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் வனத்துறையினர் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுகளால் வனப்பகுதிக்குள் இருக்கும் விலங்குகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, வன எல்லையில் உள்ள கிராமத்தினரை சத்தம் குறைவான பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்துவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...