கோவையில் இந்த தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடப்பட்டுள்ளது - தீயணைப்புத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவே கொண்டாடப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு, 16 தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர். ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் மாவட்ட தீயணைப்புத் துறை வாகனங்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், இந்த தீபாவளி பாதுகாப்பாகவே அமைந்தது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக, தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் சிறிய அளவிலான மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டன. பீளமேடு எல்லைக்குட்பட்ட பகுதியில் ராக்கெட் பட்டாசு, விழுந்ததில் தென்னை மட்டையால் வேயப்பட்டிருந்த பந்தலில் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் கோவை தெற்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் ராக்கெட் பட்டாசு, மரங்களின் மீது விழுந்ததில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர்.  பாதுகாப்பான தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...