கோவையில் இந்த தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடப்பட்டுள்ளது - தீயணைப்புத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவே கொண்டாடப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு, 16 தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர். ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் மாவட்ட தீயணைப்புத் துறை வாகனங்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், இந்த தீபாவளி பாதுகாப்பாகவே அமைந்தது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக, தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் சிறிய அளவிலான மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டன. பீளமேடு எல்லைக்குட்பட்ட பகுதியில் ராக்கெட் பட்டாசு, விழுந்ததில் தென்னை மட்டையால் வேயப்பட்டிருந்த பந்தலில் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் கோவை தெற்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் ராக்கெட் பட்டாசு, மரங்களின் மீது விழுந்ததில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர்.  பாதுகாப்பான தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...