கொஞ்சம் இனிப்பு.. கொஞ்சம் பசுமை.. நெஞ்சம் நிறைய அன்பு..!


தீபாவளி என்றால் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து முடித்துவிட்டு, பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பது  ப அனைவரின் வழக்கம்.

ஆனால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் மற்றும் உள்ளுர் பேருந்து நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த சுமார் 100 பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பசுமை தேசம் சார்பில் தீபாவளி வாழ்த்து கூறி, அவர்களுக்கு இனிப்பு, காரங்களுடன் துளசி நாற்று வழங்கப்பட்டது. இந்த எதிர்பாராத அன்பையும், வாழ்த்தையும் பெற்ற சில ஓட்டுனர்கள், எங்களையும் நேசிக்கிற மனுசங்க இருக்கிறார்கள் என்ற உற்சாகத்தை கொடுத்ததாகவும், இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் என்றதுடன், நாங்களும் உங்களுடன் இணைந்து மரம் வைக்க தயார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இவர்களுடன் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகம் தெரியாத. மனிதர்களுக்கு இனிப்பு வழங்கி பிறரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்த, இந்த தீபாவளி மறக்க முடியாததாய் அமைந்ததாகவும், இதேபோல, கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பணியை செய்து வருவதாக பசுமை தேசத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...