வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் - நான்கு வீடுகள் சேதம்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை சூறையாடின.



வால்பாறை அருகே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. பன்னிமேடு, சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ரேஷன் கடை, சத்துணவுக்கூடம், தொழிலாளர்கள் குடியிருப்பு போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், நேற்று (அக்.,18) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் காந்தி, மூர்த்தி, கெபீர், சக்திவேல் ஆகியோர் குடியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து குட்டி யானை வீட்டிற்குள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பாத்திரங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி ஆகியவற்றை சேதப்படுத்தியது.



வீட்டின் பின்புறமாக தப்பிச்சென்ற காந்தி என்பவர் அருகிலிருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டடப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...