டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- விசிக தொல்.திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் டெங்குவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



"டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மத்திய ஆய்வுக்குழு பெயரளவிற்கு மட்டுமே சுற்றுப் பயணம் செய்து கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. டெங்குவால் எத்தனை பேர் உயிரிழந்தனர், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது. இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கனவே 206 பேருக்கு கடந்த திமுக அரசு சார்பில் ஆகம விதிகளின்படி அர்ச்சகராக நியமிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மெர்சல் படத்திற்கு எதிராக பாஜக போராடுவதை விடுத்து, அப்படத்திற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே சரியாக இருக்கும்.

கலைஞர் தன்னம்பிக்கை நிறைந்த தலைவர். கோபாலபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை காரில் பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல் நிலை முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...