பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் வரும் அக்டோபர் 21ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் தலைமைவகிக்க உள்ளனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். தலைமைக் கழக நடுவராக வழக்கறிஞர் நன்மாறன் செயல்படவுள்ளார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்று வெற்றியடையுமாறு கோவை மாநகர வடக்கு திமுக இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...