கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அக்.25 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வரும் அக்டோபர் 25ம் தேதியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குப்பனூர், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்சின்னம்பாளையம், காளியாபுரம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனப்பட்டி, கப்பளாங்கரை, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கிலிபாளையம், மூலனூர், கிட்டசூரம்பாளையம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மாளபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அக்டோபர் 16 முதல் 25ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி, சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் அக்டோபர் 25ம் தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...