டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 20) தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அதிகாலையில் குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார். மேலும், திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்போது குடிநீரில் குளேரின் அளவினில் மாற்றம் கண்டால் ஊராட்சி அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும்படியும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றம் செய்து, புகைப்பட அறிக்கையாக சமர்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இதுபோன்றே, அதிகாலையில் மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும். எனவே, அலுவலர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் முழு சுகாதாரத்தினை காத்துக்கொள்ள வேண்டும் என .ஹரிஹரன் அறிவுறுத்தினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...