டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 20) தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அதிகாலையில் குடிநீர் வினியோகப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்றும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் பார்வையிட்டு ஏடிஸ் கொசுப்புழு வளருவதற்கான சூழலை அழிக்கும் பணியினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்து, குடிநீரில் தவறாமல் குளோரின் குறித்த விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டார். மேலும், திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்போது குடிநீரில் குளேரின் அளவினில் மாற்றம் கண்டால் ஊராட்சி அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும்படியும், பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றம் செய்து, புகைப்பட அறிக்கையாக சமர்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதிகளில் முழு துப்புறவு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இதுபோன்றே, அதிகாலையில் மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும். எனவே, அலுவலர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் முழு சுகாதாரத்தினை காத்துக்கொள்ள வேண்டும் என .ஹரிஹரன் அறிவுறுத்தினார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...