வால்பாறை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையை அடுத்துள்ள தனியார்  தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.



இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக்  கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.

இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...