பேச்சுவார்த்தையில் உடன்பாடு- துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் நியாயமான போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி இன்று காலை முதல் நகரை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...