கோவையில் கடைபிடிக்கப்பட்ட காவலர் வீர வணக்க நாள் - 72 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி சீன ராணுவத்துடனான போரின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்தனர்.



அவ்வாறு போரின் போதும், கலவரங்களின் போதும் உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாக கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 21-ம் நாள் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள காவலர்கள் காவலர் வீர வணக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த காவலர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



தொடர்ந்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்து 72 குண்டுகளை  விண்ணில்  முழங்கி மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலியை உரித்தாக்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...