கோவையில் எதிர்பார்த்த இலக்கை எட்டாத மது விற்பனை


கோவை மாவட்டத்தில், தீபாவளி அன்று மட்டும் 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 0.5 சதவிகிதம் குறைவு என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கவுண்டம்பாளையத்தை மையமாகக் கொண்டு வடக்கு என்றும், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு என்றும், மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் கோவை மாவட்டத்தில் இயங்கிவருகின்றன . இங்கு சாதாரண நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். தீபாவளி, பொங்கல், புது வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி, இந்த வருட தீபாவளிக்கு 12 கோடிக்கு மேல் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 6 லட்சம் ரூபாய் குறைந்து, 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

இதில் வடக்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.6 கோடியே 59 லட்சத்திற்கும், தெற்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.5 கோடியே 26 லட்சத்திற்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து ஒரு டாஸ்மாக் அலுவலர் கூறியதாவது, "இந்த தீபாவளிக்கு அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை உயர்வு மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட காரணங்களால் சென்ற ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது" என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 12 லட்சத்தி 46 ஆயிரத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையை விட குறைவாகும்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...