வால்பாறையில் வனத்துறை பயிற்சி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டு யானைகள் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் பன்னிமேடு அருகே உள்ள சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த நான்கு பங்களாக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கட்டில், பீரோ ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நேற்று இரவு நல்லமுடி பகுதியில் வனத்துறை பயிற்சி மையத்தின் நான்கு சுவர்களையும் இடித்து அங்கிருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது. 



பின், சம்பவ இடத்தில் திரண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டும், தீப்பந்தங்களைக் கொண்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



காட்டு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள வனப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் குடியிருப்புகளுக்குள் நுழையலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...