எலும்பு பிரச்சனைகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனையில் "உலக எலும்புப்புரை நாள்" விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது, தங்களின் வழக்கமான வேலைகளை பாதிக்கும் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகளை தடுக்க 50 வயதினைக் கடந்தவர்களுக்கு முறையான விழிப்புணர்வு தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, கங்கா மருத்துவமனை எலும்புப் புரை துறை தலைவர் மருத்துவர் எஸ்.ராஜசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் உலக அளவில் 8.9 மில்லியன் மக்கள் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்புப்புரையின் விளைவாக பாதிக்கப்படுகின்றனர். 50 வயதைக் கடந்த மூன்றில் ஒரு பெண்ணிற்கு ஆஸ்டியோபோரோடிக் என்னும் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது "நுண்ணிய எலும்பு" என்று பொருள். ஒரு நுண்ணோக்கியின் கீழ் பார்த்தால், ஆரோக்கியமான எலும்பு ஒரு தேன்கூடு போல் தோன்றுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் போது, ​​தேன்கூடு போன்றுள்ள துளைகள் மற்றும் இடைவெளிகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை அறியலாம்.



இதுபோன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சை மற்றும் தினசரி பணிகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றார். 

எலும்புப்புரை நோய்க்கென சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் கங்கா மருத்துவமனையில் டெக்ஷா ஸ்கேன், இரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பு வழிமுறைகளுக்கு மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, புகழ்பெற்ற பேராசிரியர் பிரவீன் சுல்தானா "வல்லமை தாராயோ" என்னும் கருவின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...