சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்: உக்கடம் அருகே தேடும் போலீசார்

கோவை உக்கடம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் சசிக்குமார் (37) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அபுதாகிர் மற்றும் சதாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், முபாரக் என்பவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கில் கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் (33) என்பவரை கடந்த அக்டோபர் 12-ம் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சசிக்குமாரை கொலை செய்த விதத்தை நடித்துக்காட்டினார். 

மேலும், சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நாய்கள் கருத்தரிப்பு தடுப்பு மையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சசிக்குமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை தேடும்பணியில் போலீசார் இன்று ஈடுபட்டுள்ளனர்.



மாநகராட்சியின் கழிவு நீர் உரிஞ்சும் வாகனங்கள் மூலமாக இன்று காலை முதல் கழிவுநீர் கால்வாயில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இந்த நீரை முழுவதுமாக உறிஞ்சி எடுத்தால் தான் ஆயுதங்களை கைப்பற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...