அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சேவை மையங்கள் திறப்பு

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம், கரியம்பாளையம் ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...