கோவையில் முதியோர்களுக்கான தடகளப் போட்டி துவக்கம்

கோவை மாவட்ட அளவில் முதியோர்களுக்கான தடகளப்போட்டி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.



கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் முதியோர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன .

35 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்றுள்ள இந்த தடகளப் போட்டியில் வயதின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.



250 ஆண்களும், 60 பெண்களும் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தையம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தடை தாண்டுதல் உட்பட இருபத்தைந்து வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.



இப்போட்டியில், 55 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...