உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெடும் பயணம்

கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் என்னும் தன்னார்வ அமைப்பு உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணத்தை தொடங்கியுள்ளது.



இந்த அமைப்பு உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவர்கள் மில்லினியம் டோனார் என்ற பெயரில் கைபேசி செயலியை தொடங்கியுள்ளனர். உடல் உறுப்புதானம் செய்ய விரும்புவோர் இதில் பதியலாம். மேலும் உடல் உறுப்புதானம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அரிந்துகொள்ளலாம்.

அனில் ஸ்ரீவத்சா, சிவானி சோனி, பிரசாந்த் பகத் மற்றும் யஷ்வரதன் சோனி ஆகியோர் இந்த பயணத்தை பெங்களூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்த பயணத்தில் இவர்கள் செய்யும் உடல் உறுப்புதானம் பற்றிய பிரச்சாரங்கள் படமாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.



இதுகுறித்து பேசிய அனில் ஸ்ரீவத்சா, 'கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் சார்பாக ட்ரைவ் இந்திய என்ற பெயரில் சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் இமாச்சல பிரதேசம் வரை உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மில்லினியம் டோனார் செயலி மூலம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எங்கள் குழு இன்று கோவையிலிருந்து புறப்பட்டு நாளை கொச்சினுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது' என்றார்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...