தாறுமாறாக பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள்: நடவடிக்கை தேவை

கோவை சுங்கம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி 5- இலக்கமிட்ட (TN 66 A 5955) தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பேருந்தை பூலுவம்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஆபிரகாம் பிலிப் (32) இயக்கி வந்தார்.

அதேநேரத்தில், சுங்கம் பகுதியில் இருந்து 5- இலக்கமிட்ட மற்றொரு தனியார் பேருந்து (TN 37 AP 7373) வந்தது. இந்த பேருந்தை அன்னூரை சேர்ந்த ஓட்டுனர் பால சுப்ரமணியன் (39) இயக்கினார். 

இந்த இரு பேருந்துகளும் ஒரே வழிப்பாதையில் பயணிப்பதால் ஓட்டுனர்களுக்கு இடையே முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டது.



இதனால், ஒருவரை ஒருவர் முந்த போட்டி போட்டுக்கொண்டு தாறுமாறாக பேருந்தை இயக்கினர்.

பேருந்து ஒலம்பஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது இரு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று உராய்ந்து விபத்து ஏற்பட்டது.



இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வார இறுதி நாள் என்பதால் பேருந்து நிறுத்தத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் பேருந்து ஓட்டுனர்கள் இருவரையும் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

வழக்கமாகவே 5 இலக்கமிட்ட பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதாகவும். அதிகாரிகள் இந்த பிரச்சனையை கண்டும் காணமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தாறுமாறாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...