விக்கிபீடியா-வில் பொரி உருண்டை, பரட்டை அழகி என்று கலாய்க்கப்படும் பாஜக பிரமுகர்கள்..!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களை மர்ம நபர்கள் சிலர் விக்கிபீடியா இணையப் பக்கத்தில் 'பொரி உருண்டை' என்றும் 'பரட்டை அழகி' என்றும் கலாய்த்து வருகின்றனர். பெயர் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். அக்கட்சியின் முக்கிய தலைவராகவும்,  மத்திய அமைச்சராகவும் பதவி வகிப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இவர்களது வாழ்கை வரலாறு மற்றும் வகித்து வரும் பதவிகள் தொடர்பான விபரங்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் பொன்.ராதாகிருஷ்ணனின் விவரங்கள் அடங்கிய பக்கத்தில் அவரது பெயருக்கு பதிலாக 'பொரி உருண்டை' என்றும், தமிழிசை சவுந்திரராஜன் விவரங்கள் அடங்கிய இணையப்பக்கத்தில் அவரது பெயருக்கு அருகே 'டுமீல் இசை' மற்றும் 'பரட்டை அழகி' என்றும் பெயரை மாற்றி கலாய்த்து வருகின்றனர்.



சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று  தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்ததும் அதனால், சமூக வலைதளங்களில் பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...