உதகையில் அன்புச்சுவர் உதவி மையத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இன்று (அக்.,23) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச் சுவர் உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



 அப்போது அவர் கூறியதாவது, இந்த அன்புச்சுவர் உதவி மையமானது மனிதாபிமானம் மற்றும் பகிர்ந்து வாழும் பண்பை வளர்க்கும் வகையில்  துவக்கப்பட்டு உள்ளது   தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உதகையில் தொடங்கப்பட்டுள்ளது. 

செல்வந்தர்கள் மற்றும் உதவி செய்யும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், காலணிகள் உட்பட இதர பயனுள்ள மக்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் கொண்டு வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் வந்து எடுத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதகை கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையர்(பொ) ரவி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...