திரைப்பட பாணியில் வயிற்றில் ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பதுக்கி வந்த வாலிபர் கைது

இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியின் வயிற்றில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. 



இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 



நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...